என்னைத் தேடி
ஒரு பெண் வந்துவிட்டுப் போனதாக
இன்று
இன்னொரு சாவியையும்
சேர்த்துக் கொடுத்தாள்
எதிர் வீட்டுச் சிறுமி
திறக்கத் தெரியாமல்
திணறியவனை
அவள் வந்த
ஸ்கூட்டியிலேயே ஏற்றி
அருகில் அழைத்துப் போனாள்
என் தோளுயரம் எனத் தொடங்கி
தாவணிப் பூக்கள்
தலைப் பின்னல்
என்று முதுகுப் புறமாய்
வழி காட்டிக் கொண்டே வந்தாள்
கொஞ்ச நேரத்திற்கெல்லாம்
அப்பெண்ணின்
வாசனை கூடத்
தெரிந்து விட்டது
கை நீட்டித் தொடும் தூரம்
வந்துவிட்டதும்
வலுக்கட்டாயமாய்
முகத்தைத் திருப்ப முயல
அதில் மீசை இல்லை
என்று சொல்லிக்கொண்டே
உள்ளே ஓடி விட்டாள்
சிறுமி.
Comments
-ப்ரியமுடன்
சேரல்
அப்பெண்ணின்
வாசனை கூடத்
தெரிந்து விட்டது//
ரசனை...
கவிதை நல்லா இருக்கு..
அப்பெண்ணின் வாசனை கூட தெரிந்து விட்டது//
கார்த்தி டச்!