Skip to main content

படிக்கட்டு

பிரகாரங்களின்
வெளிச் சுவரருகில்
அணியணியாய்க்
கழற்றி வைக்கப்படும்
காலணிகள்

கடவுள் சுற்றி
வெளிவருகையில்
கலைந்தே
கிடைக்கின்றன

பூர்த்தியாகவிருக்கும்
சில எதிர்பார்ப்புகளின்
அவசரத்தாலும்
கொஞ்சம் 
அலட்சியத்தாலும்.

Comments

Gowripriya said…
//ஏற்கனவே பிடித்த பட்டாம்பூச்சிகளைத் திரும்பத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்களாக!//

இந்தப் பட்டியலில் உங்களை நான் சேர்த்துவிட்டேன், அனுப்பியவருக்கே திருப்பி அனுப்புவதின் சங்கடம் தவிர்க்க.
thamizhparavai said…
இந்தக்கவிதை என் சிற்றறிவுக்கு எட்டலை நண்பரே...
பட்டாம்பூச்சி உங்கள் தளத்தில் வந்தமர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.
அதன் வண்ணங்களை என் மீதும் தெளித்தமைக்கும் நன்றி கார்த்தி...
கடந்த ஒரு வாரம் அலுவலகபணிச்சுமையில் வலைப்பக்கம் வரும் வழக்கம் அரிதாகி விட்டதால் இப்போதுதான் பார்த்தேன். என் பக்கத்தில் இணைத்து விடுகிறேன் நன்றி...